பக்கம்:நற்றிணை-2.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீற்றிணை தெளிவுரை ጎ1 உழையீ ராகவும் பனிப்போள், தமியே குழைவான் கண்ணிடத் தீண்டித் தண்ணென வாடிய இளமழைப் பின்றை வாடையும் கண்டிரோ வந்துகின் றதுவே! தெளிவுரை: நாம் வினை கருதிப் பிரிந்தேமாய்ச் செல்வேம் செல்வேம் என்று நீர்தான் பலகாலும் கூறுதலி ஞ்லே, யான் தலைவியின் துயரை நினைந்தேனய்ப் பலவாகப் புலந்து, செல்வீராக’ என்று சொல்லுதற்கும் அஞ்சா நிற்பேன். நீர்தான் செல்லாதீராய் இவண் இருப்பதாக” என்று சொன்னல், பலருங் கூருநிற்கும். மார்பில் எறியும் அம்புகளைப் போலுங் சடுஞ் சொற்களின் நிமித்தமாக அஞ்சா நிற்பேன். அதனலே, நீரும் செல்வீராக; சென்று செயக் கருதும் வினையினையும் முடிப்பீராக; சென்றி அவ் விடத்திலே நெடுங்காலம் நிற்றலைக் கைவிடுதற்காவது பார்த்துக் கொள்வீராக! இரவின் நடுய்ாமத்தே கலன் அணிந்த மார்பகம் வடுக்கொள்ளுமாறு தழுவியபடி நீர்தாம் அருகிலேயே இருப்பீராயினும், அந்தச் சிறுபிரிவையும் நினைத்து நடுங்குபவள் தலைவி கண்டீர்! அவள்தான் தனியே இருந்து வருந்துமாறு, அகன்ற இடமெங்கணும் பரவியபடி நெருங்கித் தண்ணென்னும்படி பெய்து வெளிதாகிய மேகத்தின் பின்னர் வந்து நின்ற வாடைக் காற்றையும் கண்டீர் அல்லவோ! ஆயின், ஆராய்ந்து செய்யத்தகுவன கருதிச் செய்வீராக! . சொற்பொருள்: சேறும்-செல்வேம். புலந்து.வேறுபட்டு. நிறம்-மார்பு. புன் சொல்-பழிச் சொற்கள். நீடாதல். நீட்டித்து இருத்தலைச் செய்யாதிருத்தலையாவது மேற்கொள் ளாமல். யாமம்-இரவின் நடு யாமம். உழையீர்-அருகிருப் பீர். பனிப்போள்-நீர்தாம் பிரிந்தும் பேர்வீரோ எனச் சிறு பிரிவுகட்கே நடுங்குபவள். வாடை-வாடைக்காலம். விளக்கம் பலபுலந்து' என்றது, தலைவனின் பிரிவைப் பற்றிக் குறிப்பினலே அறிந்தாளான தலைவியின் நடுக்கமும் மெலிவும் ஆகிய பலவற்றையும் நினைந்து புலந்து என்றதாம். அதல்ை, தலைவனைச் செல்மின்' என்று சொல்ல முடியாத வளாகின்ருள். ஆயின், உலகியல் அறநெறி கருதிப் பிரிதலை மறுக்கவும் முடியாதவள், ஊரவர் உரைக்கும் பழிச் சொற்கள் குறித்து அஞ்சுகின்ருள். இதல்ை, இதனை நாடு காவலேக் குறித்த பிரிவு என்று கொள்ளுக; அதற்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/75&oldid=774765" இலிருந்து மீள்விக்கப்பட்டது