இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
iv
அம்மையார், திரு. துரைக்கண்ணனார். திரு. துரை அரங்கனார் முதலியோருக்கும் இதனைத் தம் பதிப்பாக அச்சிட முன்வந்த திரு. பழனியப்பா அவர்களுக்கும் நான் என்ன கைம்மாறு செய்ய முடியும் ?
இப்போது, நற்றிணைப் பாடல்களுள் ஒன்பது பாடல்கள் கொண்டு நான் எழுதிய சிறு நாடகங்கள் வெளிவருகின்றன. இவற்றுள் சில, பத்திரிகைகளிலும், வானொலியிலும் வெளியானவை.
இவற்றைத் தமிழ்மக்களுக்கு என்றே எழுதினேன். அவர்கள் என்ன நினைக்கின்றார்களோ? என் கருத்துக்கள் என் கருத்துக்களே ! என் முகம்போல மற்றோரு முகம் இராது. ஆதலின், என் கருத்துக்கள் எல்லோர் கருத்துமாக முடிவது அருமை. என்றாலும், அன்பினால் குற்றத்தினைப் பொறுத்து வாழ்த்துவது அன்றோ தமிழ் மரபு? அதனையே நம்பி வாழ்கறேன்.
சென்னை, | தெ. பொ. மீனாட்சிசுந்தரன். | ||||
4-12-1954. |