உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

பறிஞர்களுக்கு இக் குறிப்புக்கள் ஒரு வகையாக விளங்கி இன்பந்தரும்.

3

இந்தப் பயன் ஒருபுறம் இருக்கப் பாட்டாகுமா என்றும் ஆராய வேண்டாவா? மாமூலர் பாட்டொன்றினைக் காண்போம்.

இயற்கையின் விளையாட்டிலே, கடவுளின் அருளால் சிறந்ததொரு தலைவனும், சிறந்ததொரு தலைவியும் ஒருவரை ஒருவர் கண்டு காதல் கொண்டு, ஈருடலும் ஓருயிருமாகக் களித்து மகிழ்ந்து வருகின்றார்கள். திருமணமோ நடைபெறவில்லை. மண வாழ்க்கைக்கு வேண்டும் பொருளினைத் திரட்டிவரத் தலைவன் தமிழ்நாடு கடந்து செல்லவேண்டுவதாகிறது. கற்புடைய கன்னியின் கவலை சொல்லப் போமா? இதனை அறிந்த ஊர்ப்பெண்கள் வாயை மூடமுடியுமா? இத்தகைய பழி தூற்றப்பெறுதலுக்கு அலர் எழுதல் என்று பெயர். மனக்கவலையால் தலைவியின் உடலம் வாடுகிறது. உள்ளுக்குள்ளோ கையாறு; வெளியிலோ அலர்—இவ்வாறு, இருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு ஒத்துப் புலம்புகிறாள் தலைவி. இதனைக் கண்ட அவளுடைய உயிர்த்தோழி ஒரு சூழ்ச்சி செய்கின்றாள். தன் மகனைத் தான் வைதாலும் பிறர் வைய மனம் பொறாள் தாய்: இதுவே உலகியற்கை. தலைவனைத் தோழி பழித்தால், அதனைப் பொறாது தலைவி தலைவனைப் பாராட்டுவாள் எனத் தோழி நினைக்கின்றாள்; அந்தப் பாராட்டு ஓர் ஆறுதலைத் தலைவிக்குத் தரும் என உணருகின்றாள்; எனவே, தலைவனை இயற் பழிக்கின்றாள். அதாவது: தலைவன் இயல்பினைத் தோழி பழிக்கின்றாள்.

72