உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

நற்றிணை தெளிவுரை


வேனில் முருக்கின் விளைதுணர் அன்ன
மாணா விரல வல்வாய்ப் பேஎய்
மல்லல் மூதூர் மலர்ப்பலி உணீ இய
மன்றம் போழும் புன்கண் மாலை,
தம்மொடும் அஞ்சும் நம்இவண் ஒழியச் 5
செல்ப என்ப தாமே—செவ்வரி
மயிர்நிரைத் தன்ன வார்கோல் வாங்குகதிர்ச்
செந்நெல்அம் செறுவின் அன்னம் துஞ்சும்
பூக்கெழு படப்பைச் சாய்க்காட்டு அன்னஎன்
நுதற்கவின் அழிக்கும் பசலையும்,
அயலோர் தூற்றும் அம்பலும் அளித்தே. 10

முருக்க மரத்தினிடத்தெ காய்ந்து முற்றிய நெற்றுக்கள் வேனிற்காலத்தே தோன்றும் தோற்றத்தைக் கொண்ட மாண்பற்ற விரல்களையுடையது, வலிய வாயினை உடையதான பேய் ஆகும். அதுதான், வளமுடைய பழைய ஊரினிடத்தே தனக்கிடப்பெறும் மலர்ப்பலியினை உண்ணும் பொருட்டாகத் தனக்குரிய மன்றிடத்தே, அந்த மன்றத்தையும் மோதியபடியாக எழுந்து தோன்றும். அத்தகைய புன்கண்மை கொண்ட மாலைக்காலம் இது. தம்மோடு கூடியிருப்பினும் பிரிவை நினைந்தேமாய் அச்சங்கொள்ளும் நாம் இவ்விடத்தாகக் கழிந்துகிடக்க, அவர்தாம் நம்மைக் கைவிட்டுச் செல்கிற்பர் என்கின்றனர். செந்நிறங் கொண்டமென்மயிரை வரிசைப்படுத்தி வைத்தாற்போன்ற நெடியதண்டினையுடைய வளைந்த நெற்கதிர்கள் விளங்கும் செந்நெற்பயிரைக் கொண்ட அழகான வயலினிடத்தே அன்னப் புள்ளானது உறக்கங்கொண்டிருக்கும். மலர் வகைகள் நிரம்பிய தோட்டக்கால்கள் சூழ்ந்த பேரூர் 'திருச்சாய்க்காடு' ஆகும். அதனைப் போன்ற என் நுதலது அழகினை அழியச் செய்யும் பசலை நோயினையும், அதனைக்கண்டு நம்மைப் பழிதூற்றும் அயலிலாட்டியரது பழிச்சொற்சுளையும் நமக்குக் கைம்மாறாக அளித்தவராக, அவர்தாம் செல்கிற்பர் என்கின்றனரே! இனி, யான் யாதாவேனோ?

கருத்து : 'அவர் பிரியின், யான் அழிவேன்' என்பதாம்.

சொற்பொருள் : வேனில் – முதுவேனில். விளைதுணர் – விளைந்த நெற்று. மல்லல் – வளமை. மலர்ப்பலி – மலரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/145&oldid=1678206" இலிருந்து மீள்விக்கப்பட்டது