உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

197


தமக்கு நன்மையைப்பெரு விரும்பினராய் முழக்குகின்ற முழவின் மார்ச்சனை வைத்த கண்ணிடம் அதிர்வதனைப்போல அதிர்ச்சி அடைந்தான். நன்மையை விரும்புவோனாகிய அவன், அவ்வாறு நடுங்கிநின்ற அந்த நிலையினை நினைக்குந்தோறும், யானும் என்னுள்ளேயே நகை கொள்வேனடீ!

கருத்து : 'அவன் என்னை மறந்திருக்க மாட்டாதான்' என்பதாம்.

சொற்பொருள் : வள் உகிர் – நெடிய நகம். மாரிக்கொக்கு – மாரிக் காலத்தே காலத்தே காணப்படும் கொக்கு; ஆம்பலின் முகைகட்குக் கொக்கின் மூக்கு உவமையாயிற்று. கூரல் – கூரிய அலகு, குண்டு நீர் – ஆழமான நீர், வான் – வெண்மை. எல் வளை – ஒளி கொண்ட வளை. தேம் – நெய்; தேன்மணமும் ஆம். ஐம்பால் – கூந்தல். மலையன் – மலையமான் திருமுடிக்காரி. முந்தை – முன்னிடத்தாக. வயிரியர் – கூத்தர்.

விளக்கம் : 'குண்டு நீர்' ஆழமான நீர் நிலை என்பதனைத் 'தீநீர்ப் பெருங்குண்டு சுனைப்பூத்த குவளை' என வரும் கபிலர் வாக்கால் அறியலாம் (புறம் 116 : 1.). இரவலர்க்குத் தேரீந்து சிறப்பிக்கும் வள்ளல்களுள் ஒருவனாதலின், 'தேர்வண் மலையன்' என்றனர். இவ்வாறே, 'தேர் வண் பாரி' (புறம் 118) எனப் பிறர் உரைப்பதனையும் ஒப்பிட்டுக் காண்க. 'ஐம்பால் பற்றி வவளவௌவிய பூசலை மனையோட்கு உரைப்பல்' என்றதும், அவன் நடுங்கியது, அவள் தன்னை அத்துணைக் கொடியவன் என்று கருதக்கூடுமே என்பதனால். இதனால் அவனுக்குத் தன் மனைவிபால் இருந்த மதிப்பும் அறியப்படும். இச்செய்தியைத் தோழியர்வழிக் கேட்கும் தலைவி, தலைவன்பால் ஊடினவளாக ஒதுக்குதலைச் செய்வாள் எனவும், அதன்பின் அவன் தன்பால் வருவான் எனவும், பரத்தை கனவு காண்கின்றாள்.

மேற்கோள் : 'இது மனையோட்கு உரைப்பல் என்றலின் நடுங்கினான் என்றது' என்னும் குறிப்புடன், கற்பியல் 151ஆம் சூத்திர உரையிடத்து மேற்கோளாகக் காட்டினர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். 'ஒருபாற் கிளவி' என்னும் பொருளியல் சூத்திர உரைக்கண் ஊடல் குறித்து வந்ததற்கு இச்செய்யுளை இளம்பூரணவடிகள் காட்டுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/198&oldid=1703961" இலிருந்து மீள்விக்கப்பட்டது