உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232

நற்றிணை தெளிவுரை


[(து–வி.) வருவதாகக் குறித்துச் சென்ற பருவத்தின் வரவினைக் கண்டு, வாராத அவனை நினைந்து ஏங்கி துயறுருகின்றாள் தலைவி. அவள், தன்னைத் துயராற்ற முயலும் தோழியிடத்தே, தன் நிலைமையை விளக்கிக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

அடைகரை மாஅத்து அலங்குசினை பொலியத்
தளிர்கவின் எய்திய தண்நறும் பொதும்பில்
சேவலொடு கெழீஇய செங்கண் இருங்குயில்
புகன்றுஎதிர் ஆலும் பூமலி காலையும்
'அகன்றோர் மன்றநம் மறந்திசி னோர்' என 5
இணர்உறுபு, உடைவதன் தலையும் புணர்விலை
ஓவ மாக்கள் ஒள்ளரக்கு ஊட்டிய
துகிலிகை அன்ன துய்த்தலைப் பாதிரி
வாலிதழ் அலரி வண்டுபட ஏந்திப்
புதுமலர் தெருவுதொரு நுவலும் 10
நொதும லாட்டிக்கு நோம்என் நெஞ்சே!

தோழீ! யாற்றை அடுத்த கரையினிடத்தே நிற்கும் மாமரங்களினது நெருங்கியிருக்கும் கிளைகளெல்லாம் அழகு கொள்ளும்படியாகத் தளிர்கள் தோன்றியுள்ளன. அதனால் அழகமைந்ததாகிக் குளிர்ந்த நறிய சோலைகளும் விளங்குகின்றன. அவற்றிடத்தே, சிவந்த கண்களை உடையதான கரிய குயிற்பேடும் தன் சேவலொடு பொருந்தியிருந்ததாகக் கூவியவண்ணம் எதிரிட்டு ஆரவாரிக்கின்றது. இவ் வண்ணமாகப் பூக்கள் மலிந்திருக்கின்ற இளவேனிற் காலத்தினும் நம்மைப் பிரிந்து போயிருப்பாரான காதலர் நம்மை மறந்திருக்கின்றனர். இங்ஙனம் எண்ணி யானும் நொந்திருப்பேன். அதன்மேலும், பூங்கொத்தினை எற்றவாகக் கட்டு அவிழ்வதன் முன்பும் தொழில் வல்லாரான ஓவியமாக்கள் ஒள்ளிய அரக்கினைத் தோய்த்து எடுத்த துகிலிகையின் தலையினைப் போன்றலான பஞ்சினையுடைய பாதிரியினது வெள்ளிய இதழ்களையுடைய மலர்கள் அழகுறத் தோன்றும். வண்டுகள் மொய்க்கும்படியாக அவற்றை வட்டியில் ஏந்திக்கொண்டாளாக, அப் புதிய மலர்களைத் தெருத்தோறும் கூவி விற்றபடி வருவாள் பூவிலை மடந்தை. ஏதிலாட்டியாகிய அவளைக் காணும்போது, என் நெஞ்சம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/233&oldid=1690685" இலிருந்து மீள்விக்கப்பட்டது