நற்றிணை தெளிவுரை
245
சொற்பொருள் : எண்கு – கரடி. பகுவாய் – அகன்ற வாய்; பிளத்த வாயுமாம். புற்றம் – புற்று வாய்ப்ப. வாங்கல் – இரை வாய்க்குமாறு பெயர்த்துத் தள்ளுதல். உரறல் – முழங்குதல். நடுநாள் – இரவின் நடுயாமம். வதுவை – திருமணம். வேங்கைக் கண்ணி – வேங்கைப் பூக்களால் தொடுக்கப்பெற்ற கண்ணி.
விளக்கம் : 'நடுநாள் வருதல் அஞ்சதும் யாம்' என்று கூறுதல், இரவுக்குறியினாள் வரும் ஏதத்திற்கு அஞ்சினேம் எனப் புணர்வுமறுத்தல் ஆகும். 'நீடு இன்று என்றது' நாளையே எனவும், அடுத்துவரும் நன்னாளில் எனவும் பொருள் தரும். 'தினையைப் போர் அடித்தற்குக் குறவர்கள் தூங்கும் களிறுகளை எழுப்புகின்ற நாடு' என்றது, தலைவனது நாட்டின் பெருவளத்தைக் கூறியதாம். 'நல் நாள் வதுவை கூடி' என்றது, நல்ல நாளினைத் தேர்ந்தே வதுவைக் கூட்டும் வழக்கத்தை உணர்த்தும்.
உள்ளுறை : 'தூங்கும் களிறுகளை எழுப்பிப் பணி கொள்ளும் குறவர்களைப்போல, யாமும் வரைதலிற் கருத்துச் செல்லாதிருக்கும் தலைவனிடத்து, அக் கருத்தினை எழச் செய்து, மணமாகிய நற்பயனைப் பெறுவேம் என்பதாம்.
இறைச்சி : கரடி புற்றிடத்துப் பாம்பினை நடுங்கி ஓடச் செய்து, தான் விரும்பிய புற்றாஞ்சோறாகிய இரையினைக் கைக் கொண்டு இன்புறுதலைப் போல, அவனோடு மணம்பெற்றுக் கூடியதும், நின் பசலை நோயை மாற்றி, நின்னைக் கூடி அவனும் இன்புற்று, நினக்கும் இன்பரு செய்வான் என்பதாம்.
126. வாய்க்க நின் வினை!
- பாடியவர் : ......
- திணை : பாலை.
- துறை : பொருள் வலித்த நெஞ்சினைத் தலைவன் நெருங்கிச் செலவு அழுங்கியது.
[(து–வி.) பொருனின் பொருட்டுத் தலைவியைப் பிரித்து வேற்றுநாடு செல்ல நினைத்தான் தலைவன் ஒருவன். ஆனால், தலைவியைப் பிரிவதற்கும் மனமில்லை! ஆகவே, தன் நெஞ்சிடம் இப்படிக் கூறியவனாகத் தன் போக்கினை நிறுத்தி விடுகின்றான்.]