உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

348

நற்றிணை தெளிவுரை


கருத்து : 'இவர்களுடைய உரிமைப் போராட்டம் என் உயிரையே போக்கிவிடும்' என்பதாம்.

சொற்பொருள் : பாகல் – பாகற்கொடி: கழனியின் வரப்புக்களிலே பாகலைப் பயிரிடுவது உழவர் மரபு. முயிறு – ஒருவகை எறும்பு: செவ்வெறும்பு. உரைத்தல் – கோதிச் சிதைத்தல். விழுமம் – பகையுணர்வு.

விளக்கம் : அரசர் இருவரும் தமக்குள் சினந்து போரிடப் புன்னை மரம் தான் வீழ்ந்து அழிவெய்தியதைப் போலத் தலைவனும் தலைவியும் ஊடலால் மாறுபட்டு ஒழுகத் தோழியாகிய தான் துயருற்று அழிகின்றனள் என்பதாம். இருவரும் அன்பும் உறவும் மேற்கொள்வதே தனக்கு மனநிறைவு தருவதாயிருக்கும என்பதும் ஆம். செவ்வெறும்புகளும் அவற்றின் வெளிய முட்டைகளும் சேர்ந்து கீழே கொட்டுவதைச் 'செந்நெல்லும் வெள்ளரிசியும் கலந்து கொட்டுவதைப்போல' என்பது நல்ல உவமையாகும்.

உள்ளுறை : (1) 'நாரை உரைத்தலிற் செந்நெல் விரவு வெள்ளரிசியில் முயிறு மூசு குடம்பை தாஅம்' என்று சொன்னது, அவ்வாறே பரத்தை உறவினாலே தலைவனின் குடும்பவாழ்வும். சிதைந்துபோயிற்று என்பதாம். முயிறு தலைவிக்கும், முட்டை அவர்கள் குழந்தைகட்கும் பொருத்திக் கொள்க.

(2) நாரை உரைத்தலால் குடம்பையுள் முயிறு உதிருமாறு போலத் தலைவியும் தலைவனும் சினமிகுந்து நோக்குதலால் தோழியின் உயிர் உடற்கூட்டினின்று அகலும் என்பதுமாம்.

181. கவின் பிழைத்தது!

பாடியவர் : ......
திணை : முல்லை.
துறை : வினைமுற்றிப் புகுந்தது கண்ட தோழி மகிழ்ந்து உரைத்தது.

[(து–வி.) வினைமுடித்த தலைவன் மீண்டும் வந்தான். அதனைக் கண்டாள் தோழி. இனித் தலைவியின் துயரம் அனைத்தும் தீருமெனக் கருதி மகிழ்ந்தாள். தனக்குள்ளாகவே இப்படி மகிழ்வோடு கூறிக்கொள்ளுகின்றாள்.]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/349&oldid=1706373" இலிருந்து மீள்விக்கப்பட்டது