உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

நற்றிணை தெளிவுரை


தகப்பனை இழந்து துன்புற்றிருந்ததுமான தன் அழகிய கன்றினைத் தான் தழுவிக் கொண்டதாய்த், திடுமென விரைவாக வந்தடைந்த ஆற்றுதற்கரிய புண்ணுற்றார் ஒருவரைப் போலப் பெரிதும் வருத்தமுற்று, அவ்விடத்தேயே நிற்பதுமாயிற்று. அத்தன்மையினையுடைய கானக நாடன் நம் தலைவன் ஆவான்!

அவனுக்கு, 'நம் நிலைமைதான் இத் தன்மையது' என்று அதனைக் குறித்துக் கூறினால் எதுவும் குற்றமாகுமோ?

கருத்து : 'விரைய வந்து நம்மை மணந்துகொள்ளு மாறு அவனை வற்புறுத்துவோம்'

துமாம்.

சொற்பொருள்: உழுவை - புலி. பிணி - பிரிவாலுற்ற நோய்; உள்ளத்தைப் பிணித்துக் கொண்டிருத்தலாற் பிணி யாயிற்று. இயங்கல் - இடம்விட்டு நகருதல். பைதல் துன்பம்.

விளக்கம் : 'முருகு உதவாமாறு' காணும் அன்னை, இது தெய்வக் குற்றமன்று என்பதனைத் தெளிந்து. தலைவியது களவுறவை அறியவும், அதனால் தலைவியை இற்செறிக்க வும் நேருமாதலின், வரைந்து வந்து மணத்தலே செய்தற்கு உரித்தாகுமெனத் தலைவனும் உணர்வான். ‘கழங்கு காணல்' ஒரு வகைக் குறிபார்த்தல். 'அறுவை தோயும் ஒரு பெருங்குடுமி, சிறுபை நாற்றிய பல்தலைக் கொடுங்கோல், ஆகுவதறியும் முதுவாய் வேல! கூறுக மாதோ நின் கழங்கின் திட்பம்' எனக் குறிகேட்டறியும் மரபினைக் 'கயமனார்' மணிமிடைபவளம்

விளக்கிக் கூறுகின்றனர் -(அகம். செய்யுள் 195). யான் அது கூறின் எவனோ?' என்றது, நம்பால் அருளுற்று நம் துயரை யறிந்து தீர்த்தற்கு மறந்தா னாகிய அவனுக்கு, யானே அதுகுறித்துக் கூறித் தெளிவித் தால் என்ன தவறோ?' என்றதாம். இதனால், தலைவி தோழிக்குக் கூறியதாக இச்செய்யுளைக் கொள்வதும் பொருந்துவதாகும்.

பிடி

உள்ளுறை : 'களிற்றின் பிரிவுக்கு ஆற்றாத யானது, தன் கன்றைத் தழுவியபடியே செயலற்று வாடி நிற்கும் நாடன்' என்றது, அத்தகைய நாட்டினனாயிருந்தும், தன்னைப் பிரிந்ததனால் தலைவிக்கு வந்துறும் பெரு நோயைப் பற்றிக் கருதானாய், அவளை வரைந் கொள்ளாதும், பிரிந்து நெடுநாள் அகன்று போயும் அருளற்றவன் ஆயினனே' என்று நொந்ததாம். 'தலைவனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/97&oldid=1627219" இலிருந்து மீள்விக்கப்பட்டது