இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நலமே நமது பலம் 33
பெருவாரி நோய்களுக்கான அடையாளங்கள் (Symptoms);
1.
நோய் ஏற்பட்ட பிறகு, காய்ச்சல் ஏறிக் கொண்டே இருக்கும். சில சமயங்களில் மிகவும் உச்ச நிலைக்கும் போய்விடும்.
உள்ஸ்ரீப்புக்கள் உண்டாக்கிவிட்ட அந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றபோது நடுக்கமும் குளிரும்
கூட ஏற்படும். -
உடல் முழுதும் வலி, வேதனை மிகுந்திருக்கும், கழுத்து, தொண்டை, தலை, வயிற்றுப் பகுதி கூட வலியால்
துடிக்கும் நிலை ஏற்படும்.
சில சமயங்களில் உடல் முழுவதும் கொப்புளங்களும் கிளம்பும். -
உடலுக்குள் ஏற்பட்ட நச்சுத் தன்மைகள் தாம் இப்படி
வெளிப்புறத்தில் கொப்புளங்களாகக் கிளம்பி விடுகின்றன.
இனி ஒரு சில பொதுவான பெருவாரி நோய்கள் பற்றித்
தெரிந்து கொள்வோம்.