பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒனவையார் క్షీ

இவளுகிய தோண்டைமான் என்னும் அரசன், தனக் 癖"謚.產發 காரணமாக அதியமானத் தன் னினும் ன்ெனக்கருதி, அவைேடு பொருதற்குச் சமயம் கோக்கியிருந்தான்். இதனை உணர்ந்த அதியமான், தன் ஆற்றலையும், சிறப்பினையும், அஞ்சாமையையும் எஞ் சாது தாது மூலம் அறிவித்தற்குக் கருதியவன், இவ் வரும்பெருங்கருமத்துக்குத் தக்கவர், நா வன்மையும், பாவன்மையும், அரசியலறிவும் மிக்க ஒளவையாரே, எனத் துணிந்து, அவரை அவனிடத்துத் தூது செல்ல வேண்டினன். ஒளவையாரும் அவ்வரசியற்பெருங் காரியத்தைப் பின்னிடைவின்றி மேற்கொண்டு, புறப் பட்டுப் போய்க் காஞ்சி நகரடைந்து, தொண்டை மானேக் கண்டார். அவனும் புலவராயும் தூதராயும் வந்த அவரை மீப்பட மதித்து உபசரித்தான்். ஒளவை யார் அவனது அரண்மனைக்கண் அன்று உண்டியருந்தித்

தங்கியிருந்தனர்.

பின்னர்த் தொண்டைமான் தனது அரண்மனைக் காட்சியை அதியமானிடத்திருந்து வந்த ஒளவையாருக் குக் காண்பிப்பான் போலத் தன் படை மிகுதியையும் போராற்றலேயும் உணர்த்த கினேந்து, அவரை அழைத் துச் சென்று பல்லிடங்களையும் காட்டி வந்தவன், தனது ஆயுதச் சாலைக்கு அழைத்து வந்து, அங்கு கெய் பூசி உறையிட்டு அலங்கரித்து அணி அணியாய் வைத்திருக் கும் ஆயுதவகைகளேயெல்லாம் காட்டி நின்ருன் மனத் தது பாடும் ஆற்றல் வாய்ந்த ஒளவைப் பிராட்டி யாருக்கு அவனது உட்கிடை அறிதல் அரியதாமோ? இவர் அவற்றைப் பார்த்து, அவனுக்குச் செருக்கடங்க அறிவு கொளுத்த கினேந்து, சில கூறுபவராய், இப் படைக் கருவிகளெல்லாம் (போரில் பயன் படாமை