இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நல்ல கதைகள்
8
சத்தமோ அவன் காதுவரை கூட போகாது. அவ்வளவு தூரம் காதுகளைப் பழக்கி வைத்திருந்தான்.
கண்ணனது பெஞ்சைத் தடதடவென தட்டும் சத்தம். கலகலவென மாணவர்கள் சிரிப்பொலி.
திடுக்கிட்டு விழித்தான் கண்ணன். திரு திருவென தன் ஆந்தைக் கண்களை அகல அகல விரித்தான். ஆசிரியர் அருகில் நிற்பதைப் பார்த்ததும் திகைத்தான்.
கண்ணா! "எந்த உலகத்தில் இருக்கிறாய்? இந்திரலோகமா அல்லது சந்திர லோகமா" என்று ஆசிரியர் கேட்டார்.
எமலோகமா இருக்கும் சார்!
மாணவர்களிலே ஒரு வாயாடி மாணிக்கம் அப்படிக் கூற, இடி சத்தம்