இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நல்ல கதைகதள்
60
மணி யோசித்து யோசித்துப் பார்த்தான். எதுவுமே அவன் நினைவுக்கு வரவில்லை. அந்தப் பலகையில் படுக்கிற வரைதான் நினைவுக்கு வருகிறது. அதற்குப் பிறகு எதுவுமே புரியவில்லை.
திருடன் ஒருவன் ஒரு குழந்தையின் சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஓடிவர, அவனைப் போலீஸ்காரர்கள் துரத்த, அவன் பூங்காவிற்குள் நுழைந்து, மணியின் பைக்குள் போட்டு விட்டு ஓடியது தூங்கிய மணிக்கு எப்படித் தெரியும்!
தன்னைப் பற்றியும் தன் முகவரியைப் பற்றியும் கூறக்கூட அந்த காவலர்கள் விடவில்லை.
பசி அவனைத் தின்று கொண்டிருந்தது.
மாலை நான்கு மணியாயிற்று. இதற்குள் பலமுறை ஏதாவது