பக்கம்:நல்ல சேனாபதி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 நல்ல சேபைதி

பிற படைத் தலைவர்களோடும் அமைச்சர்களோடும் அவை கூட்டி, அவரை வரவேற்றுச் சிறப்புச் செய் தான். .

சர்க்கரை மன்ருடியார் இன்று தம்முடைய நாட் டைக் காப்பாற்றிப் புகழ் பெற்ருர்’ என்று பாண்டியன் சொல்லும்போது, இல்லை, இல்லை; பாண்டிய மன்னர் ஏவலின்படி அவர் பாதுகாப்பிலுள்ள பகுதியைப் பல வீரர்களின் துணை கொண்டு ஓரளவு காவல் புரிந்தனர் என்று சொல்லுவதுதான் முறை” என்ருர் மன்ருடியார். - "உங்கள் பணிவும், என்பால் உள்ள அன்பும் உங்கள் பெருமையை உயர்த்துகின்றன. உங்கள் வீரம் பாண்டி நாட்டின் செல்வம். உங்களால் இன்று சோழன் நம் படையின் பெருமையை உணர்ந்தான். அவன் எடுத்த ஓட்டம் புகார் நகரத்து அரண்மனையின் அந்தப்புரத்தில்தான் போய் முடிந்திருக்க வேண்டும்” என்று புகழுரை கூறிஞன் பாண்டியன். - - -

'இனிச் சோழ மன்னன் தன் ஆயுள் முழுவதுமே போரைப் பற்றி நினைக்கமாட்டான்' என்ருர், படைத் தலைவர் ஒருவர். . - -

நீங்கள் பாண்டிய நாட்டுக்குக்கண். நாட்டுத் தலைவ ராக இருந்த் உங்களைச் சேனபதி ஆக்கினேன். அதற்கு நீங்கள் எவ்வளவு பொருத்தமானவர்கள் என்பதை இன்று உலகம் உணர்ந்துகொண்டது. உங்களை வெறும் சேனபதி என்ரு சொல்வது? நீங்களே நல்ல சேனுபதி. இத்தகைய நல்ல சேன பதி இருக்கும்பொழுது எனக்குப் பகையைப் பற்றி என்ன கவலை?” என்ருன் பாண்டியன். - - - அவன் பேருவகையோடு சொன்ன வார்த்தை நிலத்து விட்டது. நல்ல சேனபதி என்று பாராட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/21&oldid=583984" இலிருந்து மீள்விக்கப்பட்டது