பகதூர் தொண்டைமான் 33
அதை நாம் அடக்கினல் அடங்கிவிடுகிறது; அடக்கா விட்டால் துள்ளுகிறது.” -
நவாப் சிறிது யோசனையில் ஆழ்ந்தார். அருகில் இருப்பவர்கள், அவர் என்ன தண்டனை விதிக்கப் போகிருரோ என்று கவனித்துக் கொண்டிருந்தார்கள். நவாப் பேசலானர்; "நீ சிறந்த வீரன்; உன்னை நான் மெச்சுகிறேன்." r
தொண்டைமான் நிமிர்ந்து நோக்கின்ை. -
நீ பெரிய வீரன் மட்டும் அல்ல; பேச்சிலும் வல் லவன். உன் உடற் பலத்தையும் அறிவுப் பலத்தையும் பாராட்டுகிறேன். நமக்குத் தேவையானபோது உனக்கு ஆள் விடுகிறேன். நீ இனி நம்முடைய சேவகன். உன் பெயர் இனி வெறும் தொண்டைமான் அல்ல. வளர் கடாவைக் காதறுத்த பகதூர் தொண்டைமான் நீ" என்று நவாபு சொன்னபோது யாவரும் அவனையே பார்த் தார்கள். - - .
அவன் நன்றியறிவோடு சலாம் வைத்தான். அன்று முதல் அவன் பின்னும் செருக்கோடு தன் வலிமையைப் பாதுகாத்து வந்தான். வளர்கடாவைக் காதறுத்த பகதூர் தொண்டைமான் என்ற பெயர் எங்கும் வழங்க லாயிற்று. . .