பக்கம்:நல்ல சேனாபதி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாசலில் ஏடு

புலவர் நெடுந்துராத்திலிருந்து வந்திருந்தார். வாணராயரைக் கண்டு அளவளாவ வேண்டுமென்றும், அவரால் தம்முடைய வறுமையைப் போக்கிக் கொள்ள வேண்டுமென்றும் எண்ணி வந்திருந்தார். அவருடைய துரதிருஷ்டம் வாணராயர் எங்கோ வெளியூர் போயிருந் தார். வந்திருப்பவர் புலவர் என்பதை அறிந்து வீட்டில் உள்ளவர்கள் உபசரித்து வரவேற்ருர்கள். வாணராயர் இன்னும் சில நாட்களில் வந்து விடுவாரென்றும், அது வரையில் தங்கியிருக்கலாமென்றும் அவர்கள் சொன் ஞர்கள். புலவர் நாணம் உடையவராதலின், சும்மா பொழுது போக்கிக் கொண்டு முகம் அறியாதவர்களுக் கிடையில் இருக்க விரும்பவில்லை. பின்பு வருகிறேன் என்று சொல்லிப் போய்விட்டார். - -

வாணராயர் வெளியூருக்குப் போயிருந்தவர் திரும்பி வந்தார். புலவர் ஒருவர் வந்திருந்த செய்தியை உற வினர்கள் சொன்னர்கள். - | -

'அவர் எந்த ஊர்? என்ன பேர்?" என்று வினவி ஞர் வாணராயர். அவர்கள் அவற்றைக் கேட்டு வைத்துக் கொள்ளவில்லை என்று சொன்னர்கள். அதனை அறிந்து மிக வருந்தினர் வாணராயர். 'வந்தவர் எவ்வளவு பெரிய புலவரோ குறிப்பு அறிந்து ஈயும் கொடையாளிகளிடந்தான் தண்டமிழ்ப் புலவர் செல் : வார்கள். அவர் எப்படி மனம் வருந்திப்போளுரோ? : என்று எண்ணி எண்ணி நைந்தார். - ‘. . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/33&oldid=583996" இலிருந்து மீள்விக்கப்பட்டது