புலயை நாடிய வள்ளல் 45.
சொல்லிக்கொண்டே இருந்தார்கள். ஆளுல், ஒருவரும் புலியோடு சண்டையிட முன்வரவில்லை.
பாரியூரில் செட்டி பிள்ளையப்பன் என்ற ஓர் உப காரி வாழ்ந்து வந்தான். அவன் கொங்கு வேளாளர் மரபில் தோன்றியவன். ஓரளவு செல்வகை வாழ்ந் தான். 'ஈ' என்பார்க்கு இல்லை என்னுது வழங்கும் கொடையாளி. அவனிடம் ஏழைகளும் புலவர்களும் அடிக்கடி வந்து பொருள் பெற்றுச் செல்வார்கள். புலவர்கள் வந்தால் சில காலம் அவனுடன் தங்கித் தம் புலமையைக் காட்டி இன்புறுத்திப் பின்பு விடை பெற். றுக்கொண்டு செல்வார்கள்.
அத்தகைய கொடையாளிக்கு வறுமை வந்தது. மழை பொய்த்தமையால் விளைவு குறைந்தது. ஆலுைம், அவ்வுபகாரியின் கொடை குறையவில்லை. எத்தனை நாளைக்குத்தான் கொடுத்துக்கொண்டே இரு க் க முடியும்? கையில் உள்ள பொருளை யெல்லாம் கொடுத் தான். தான் கஞ்சி உண்டாலும் வருபவர்களுக்குச் சோற்றை ஊட்டினன். - -
இத்தகைய நிலையில், யாரோ ஒரு புலவன் அவனைத் தேடிக் கொண்டு வந்தான். முன்னே செட்டி பிள்ளை யப்பனைப் பற்றி அப் புலவன் கேள்வியுற்றிருந்தாலும், அவளுல் வர முடியவில்லை. எங்கெங்கோ போய்க் கொண்டிருந்தான். இப்போதுதான் பாரியூருக்கு வர நேர்ந்தது. .
தன்னைத் தேடி வந்த புலவனிடம் தன் வறுமை யைக் காட்டாமல் முக மலர்ச்சியுடன் பேசிக் கொண் டிருந்தான் உபகாரி. புலவன் உணவு அருந்தின்ை. அவனுக்குப் பொருள் வேண்டியிருந்தது. குறிப்பறிந்து, ஈயும் கொடையாளியாகிய செட்டி பிள்ளையப்பனிடம் அப் புலவன் வாய் விட்டே கேட்டு விட்டான்.