பக்கம்:நல்ல சேனாபதி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. நல்ல சேனபதி

இது வரையில் இந்த அவல நிலை செட்டி பிள்ளை யப்பனுக்கு வந்ததே இல்லை. புலவன் வெளிப்படை யாகக் கேட்டும் கொடுக்க இயலாமல் உடம்பில் உயிரை வைத்துக்கொண்டு வாழ்வதில் பயன் ஒன்றும் இல்லை என்று தோன்றியது அவனுக்கு. அந்தச் சமயத்துக்குப் புலவனுக்கு ஏற்ற விடை கூற வேண்டும் அல்லவா? 'இன்னும் இரண்டு நாள் கழித்து வாருங்கள். உங் களுக்கு வேண்டியதைத் தர முயல்கிறேன்” என்று சொல்லி அவனை அனுப்பினன். அப் புலவன் அங் குள்ள நிலையை ஒருவாறு உணர்ந்துகொண்டு புறப் பட்டு விட்டான்.

புலவன் போன பிறகு செட்டி பிள்ளையப்பன் துயரில் மூழ்கியவனுய் உட்கார்ந்திருந்தான். தன் வாழ்க்கையில் இப்படி இழிவான நிலை வந்ததை அவளுல் பொறுக்க முடியவில்லை. உணர்விழந்து செய லிழந்து அவன் அமர்ந்திருந்தான்.

அப்போது அவனுடைய நண்பன் ஒருவன் வந் தான். அங்கே நடந்தது ஒன்றையும் அவன் அறியான். அவன் விரைவாக வந்து, 'ஊரில் எல்லாரும் புலிக்குப் பயந்து சாகிருர்கள். இது வரையில் மாடுகளை அடித்து உண்டு விட்டது; இனிமேல் மனிதர் மேல் பாய வேண் டியது தான்' என்ருன். -

செட்டி பிள்ளையப்பன் அவனைத் தலை நிமிர்ந்து பார்த்தான். நண்பன் மறுபடியும், 'ஏன் இப்படி உட் கார்ந்திருக்கிருய்?’ என்று கேட்டான். -

"புலியைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருக் கிறேன்' என்ருன் கொடை வள்ளல். நண்பனுக்குத் தன் துயரைச் சொல்லி என்ன ஆகப் போகிறது என்று அவன் நினைத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/55&oldid=584018" இலிருந்து மீள்விக்கப்பட்டது