பக்கம்:நல்ல சேனாபதி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியை நாடிய வள்ளல் 4?

"இந்த ஊரில் யாரும் ஆண் பிள்ளை இல்லையா?” என்று கேட்டான் நண்பன்.

'இல்லாமலா போவார்கள்? பார்க்கலாம்” என்று பராக்காகக் கூறிஞன் செட்டி பிள்ளையப்பன். நண்பன் போய் விட்டான்.

கொடையாளிக்குச் சற்றே முகம் மலர்ந்தது. நண்பன் தன் துயரத்தைப் போக்க வழி காட்டினன் என்று எண்ணிஞன். புலி வாழும் காட்டுக்குள் போய் அதற்கு இரையாகலாம். கொடுப்பதற்கு ஒன்றும் இல் லாமல் இந்த உடம்பைச் சுமந்து கொண்டு வாழ்வதை விட, இதுவே நலம் என்று அவன் நினைத்தான்.

மறு நாள் தன் வீட்டில் உள்ளவர்களுக்கும் ஊரவர் களுக்கும் அவன் ஒரு செய்தியைச் சொன்னன். 'நான் காட்டுக்குள் சென்று புலியைக் குத்தி விட்டு வரப் போகிறேன்” என்ருன். ஊரவர் அவனைக் கண்டு வியந் தனர். மனைவியும் பிற சுற்றத்தாரும் தடுத்தனர். ஆல்ை, வீர மரபினராதலால் அவனுடைய மிடுக்கான வார்த்தைகளைக் கேட்டுச் சும்மா இருந்து விட்டனர்.

அவன் வேலோடும் வாளோடும் புறப்பட்டான். "துணைக்கு யாரும் வர வேண்டாம்” என்று சொல்லி விட் டான். அவன் வெற்றியுடன் திரும்பி வர வேண்டு மென்று யாவரும் வாழ்த்தினர். - . . . . செட்டி பிள்ளையப்பன் புறப்பட்டுக் காட்டுக்குச் சென்ருன். புலியைக் குத்திக் கொல்லப் போகவில்லை; தன்னையே மாய்த்துக் கொள்ளத்தான் போனன். ஆகை யால் சிறிதும் அச்சமின்றிக் காட்டுக்குள் நுழைந்தான். எங்கெங்கோ சுற்றியும் புலி கண்ணிற் படவில்லை. பகல் நேரத்தில் புலி வெளியே வராதென்பது அவன் நினை வுக்கு வந்தது. காட்டின் நடுவேயுள்ள குன்றில் எங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/56&oldid=584019" இலிருந்து மீள்விக்கப்பட்டது