பக்கம்:நல்ல தமிழ்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவ்வப்போதே தனியாகத் தொகுத்து அச்சிட்டு பின் நூலாக்கிச் சில படிகள் தந்து, இதன் வரவினால் ஏதேனும் பள்ளியைத் தொடங்குமாறு கூறினார்கள். எனினும்அப்போது அதுபற்றி நான் சிந்திக்கவில்லை. ஆயினும், கால் நூற்றாண் டிற்குப் பின் என் அன்னையின் பள்ளியின் சார்பிலே இன்று இந்த நல்லதமிழ் இன்றைய தேவைக்கு ஏற்ற வகையில் சில பல மாற்றங்களுடன் வெளிவருகின்றது. இதன் வருவாய் அனைத்தும் வள்ளியம்மாள் கல்வி அறத்தையே சாரும். நான் இதற்குமுன் இளைஞர் இலக்கணம் போன்றவற்றை யும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கென எழுதியுள்ளேன். எனினும் இது மாணவர்களுக்கு மட்டுமின்றி, தமிழைப் பிழை யறப் பேசவும் எழுதவும் விரும்பும் யாருக்கும்-அதிகம் பயி லாதவருக்கும் பயன்படுவகையில் எளிய முறையில் தெளி வான வகையில் எழுதப்பட்டுள்ளது. அனைவருக்கும் இது பயன்படும் என நம்புகிறேன். இந்நூலினையும் என் பிற நூல்களையும் மறுபடி வெளிக் கொண்டு வரவேண்டும் எனப் பலரும் என் மாணவர் சிலரும் விரும்பிய நிலையிலேயே இது இன்று-குழந்தைகள் நாளில் வெளிவருகிறது. இதை மாணவரும் மற்றவரும் ஏற்றுப் பயன்படுத்தி நல்ல தமிழை நாட்டில் வளர்க்கவேண்டும் எனக் கேட்டுக் கொள்ளுகிறேன். இந்நூல் வெளிவர உடன் நின்ற அனைவருக்கும் நன்றி யுடையேன். வள்ளியம்மாள் கல்வி அறம் அன்பன், சென்னை-102 14—11—85 அ. மு. பரமசிவானந்தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/11&oldid=775016" இலிருந்து மீள்விக்கப்பட்டது