பாரதிதாசன்
11
சாலி :எனக்கு நீங்கள் ஆடல் பயிற்சி
அளிக்க வேண்டும்.
நிலவு : நான் பீலி நாட்டில் தடாரி வட்டம் என்னும்
இடத்தில் வாழ்கின்றேன். அங்கு நீ வர
ஏற்பாடு செய்து கொள்.
சாலி :நன்று! போய் வருகின்றேன்.
காட்சி 3
[பெருமன்னன் மகள் முல்லையும், சாலியும்
கிள்ளையும் குவளைப் பூக் குலுங்கும் நிழலில்
அமைந்த திண்ணையில் அமர்ந்து பேசிக்
கொண்டிருந்தார்கள்]
கிள்ளை :ஆற்றூர் காரி மன்னனுக்கும், நம் நாட்டுப்
பேரரசர்க்கும் மனத்தாங்கல் இருந்தால்,
பீலி நாட்டில் நான் ஏன் ஆடல் கற்றுக்
கொள்ளக் கூடாது?
சாலி : நீ அதை அவர்களையே கேட்பது தானே.
கிள்ளை : கேட்டேனே சாலி.
சாலி : என்ன சொன்னார்கள்?
கிள்ளை :அவர்களா ? நீளமாகச் சொன்னார்கள்,
என்ன சொன்னார்கள் தெரியுமா?
"அதற்கு மேல் கேட்காதே—அரசியல் செய்தி"
முல்லை : கிள்ளை! அதோடு நிறுத்திவிடு இவ்வளவு
கூட நீ வெளிப்படையாய்ப் பேசியிருக்கக்
கூடாது.
கிள்ளை : ஏன் சாலி நீ கேட்டாயா உன் பெற்றோரை?
சாலி : கேட்டேன்.