பக்கம்:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசன்

11

சாலி :எனக்கு நீங்கள் ஆடல் பயிற்சி அளிக்க வேண்டும். நிலவு : நான் பீலி நாட்டில் தடாரி வட்டம் என்னும் இடத்தில் வாழ்கின்றேன். அங்கு நீ வர ஏற்பாடு செய்து கொள்.

சாலி :நன்று! போய் வருகின்றேன்.

காட்சி 3
[பெருமன்னன் மகள் முல்லையும், சாலியும், கிள்ளையும் குவளைப் பூக் குலுங்கும் நிழலில் அமைந்த திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.]

கிள்ளை :ஆற்றூர் காரி மன்னனுக்கும், நம் நாட்டுப் பேரரசர்க்கும் மனத்தாங்கல் இருந்தால், பீலி நாட்டில் நான் ஏன் ஆடல் கற்றுக்கொள்ளக் கூடாது?

சாலி : நீ அதை அவர்களையே கேட்பது தானே.

கிள்ளை : கேட்டேனே சாலி.

சாலி : என்ன சொன்னார்கள்?

கிள்ளை :அவர்களா ? நீளமாகச் சொன்னார்கள், என்ன சொன்னார்கள் தெரியுமா? "அதற்கு மேல் கேட்காதே-அரசியல் செய்தி"

முல்லை : கிள்ளை! அதோடு நிறுத்திவிடு இவ்வளவு கூட நீ வெளிப்படையாய்ப் பேசியிருக்கக் கூடாது.

கிள்ளை : ஏன் சாலி நீ கேட்டாயா உன் பெற்றோரை?

சாலி : கேட்டேன்.