12
நல்ல தீர்ப்பு
கிள்ளை: கேட்டாயா? என்ன சொன்னார்கள்?
சாலி : உனக்கு சொல்லியது போலில்லை.
கிள்ளை : அப்படியா. என்ன?
சாலி : "போகக்கூடாது"
கிள்ளை : ஏன் என்று கேட்டாயா?
சாலி : விட்டுவிடுவேனா?
கிள்ளை : உம்
சாலி :
- ஏன் என்றேன். அதற்கு அவர்,... கேட்காதே!
முல்லை : உங்கள் ஆவல் நிறைவேறாததற்கு நான் வருந்துகிறேன்.
கிள்ளை : இளவரசியே, என்கண்ணே, என்னை என் பெற்றோர் "போ" என்று சொன்னாலும் நான் உடனே போயிருக்க மாட்டேன். ஏன் தெரியுமா?
முல்லை : இதென்ன புதுமை?
சாலி : ஏன்?
கிள்ளை :கொஞ்ச நாளைக்கு மிக்க வேலையிருக்கிறது.
முல்லை : உனக்கா?
சாலி: என்ன கூடை முறம் கட்ட வேண்டுமா?
கிள்ளை: நன்றாகக் கேட்டாய். நீ சொன்னது பாதி சரி
முல்லை: கூடை முறம் ஒரு பாதி கட்டவேண்டும்; மறுபாதி? இவைகளில் எது சரி?
கிள்ளை : "கட்டவேண்டும்"
சாலி : என்ன கட்டவேண்டும்?
முல்லை : விரைவில் சொல்லிவிடு?
கிள்ளை : மாலை கட்டவேண்டும். இளவரசிக்கு