உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அங்கம் 2


காட்சி 1



                           [பிறை நாட்டின் அரண்மனையில் ஒரு பகுதி
                           இளவரசி முல்லை மணித் தவிசில்
                           வீற்றிருக்கிறாள். தோழிமார் பலர் புடை
                           சூழ்ந்திருக்கிறார்கள். முல்லையின் தந்தையும்,
                           பேரரசனுமாகிய வயவரி மன்னனும் பேரரசி
                           கன்னலும் வருகிறார்கள். மங்கல முரசு
                           அதிர்கின்றது]

பேரரசர் : வாழிய குழந்தாய். தமிழ் நன்று. அது
                   தமிழர்க்கு உறுதி பயப்பது. அதை இன்னும் நீ
                   பயில்க! தமிழறிவு பெறுக. பிறை நாட்டின் எதிர்
                   கால அரசி நீ. அறம் இது, மறம் இது என்று
                  ஆய்ந்துணர்க. வாழிய நீடு வாழிய!

பேரரசி : அன்புக்கொரு மகளே, முல்லையே மணம்
                   எய்துக உனது பதின்மூன்றாம் ஆண்டு தொடங்கிற்று.
                   நீ வாழிய!

முல்லை : உங்கள் வாழ்த்து நன்று. என்பால் தங்கட்குள்ள
                   அன்புக்கு நன்றி! தந்தையார் வாழ்க,
                   அன்னையார் வாழ்க, தமிழ் வாழ்க.
                                                                          [முல்லை பணிகின்றாள்]

                                   [பேரரசும் பேரரசியாரும் போகின்றார்கள்]
நிலவு, சாலி, தாழை, பொன்னி, தோரை முதலிய
பெண்கள், தத்தம் இயல்புக்கேற்ற கையுறையுடன்
வருகிறார்கள்.

தோரை--தான் கொணர்ந்த தங்கப்பானை யடுக்கிய
வெள்ளியுறியை முல்லைக்குத் தந்து--வாழிய
இளவரசியே என்று வாழ்த்துகிறாள்.