பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பந்த ாட்டம் வீட்டுக்கு உள்ளே விளையாட்டா! வெளியே போய்நீ விளையாடு! ஆட்டம் போட்டத் தருமனையே அம்மா வெளியே விரட்டிவிட்டாள்! சரிமா என்று சொல்லிவிட்டு தந்தை கொடுத்த புதுப்பந்தை, பொறுமை இன்றி எடுத்துக்கொண்டு போனான் தருமன் தோட்டத்திற்கு! தருமன் உதைத்தான் பந்தோட தாவி குதித்தான் அதன் கூட அருமை அருமை என ஆடி ஆட்டம் போட்டான் சுகம்தேடி