பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இறக டித்தல் இன்றியே
எழுந்து வானில் செல்லுவேன்
பறவை போல நீந்துவேன்
பார்த்து நீங்கள் மகிழவே

மின்னல் போல வேகமாய்
விரைந்து பறக்கும் பொழுதிலும்
என்னுள் மக்கள் பலரையே
ஏற்றிச் சுமந்து செல்லுவேன்

வரண்ட பாலை யதனையும்
மலையும் கடலுந் தாண்டுவேன்
இரண்டு நாளில் பாதி உலகம்
ஏக என்னால் முடியுமே

நீல வானில் பறப்பதும்
நீண்ட தொலைவு செல்வதும்
நாளும் என்றன் இன்பமாம்
நல்ல குழந்தை நீயும்வா,

53