இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
42 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
யுடன் - காட்சியளிக்கின்றனர். அப்பொழுது சேரன் எழுந்து உலவுகின்றான்.)
சேரன்: மலையை முற்றுகை இட்டுப் பயனில்லை. மாதங்கள் மூன்று ஓடி விட்டன. அந்த மடையனின் மண்டைக் கனம் இன்னும் அடங்கவில்லை. நம் படை புகவும் ஒரு தடங்கலும் இல்லை. -
சோழன்: நமக்கு ஒரு தூது கூட அனுப்பவும் இல்லை. இது என்ன பறம்புமலையா! இல்லை பாம்பு மலையா...
பாண்டி: உணவுக்கு என்ன செய்கிறான்...ஒரு வழி கூட இல்லாமல் அடைத்து விட்டோம். போக்கு வரத்து எப்படி இருக்கும்? ஏதாவது சரங்க வழி...
சேரன்: இல்லை... இருக்க வழி இல்லை. பாருங்கள். இன்னும் இரண்டே நாளில் அங்கிருந்து பதில் வரத்தான் போகிறது.
சோழன்: ஆமாம். பசித்த மக்கள் பாய்ந்தெழுந்தால், பாரி எங்கே போவான்? பதறி அடித்துக் கொண்டு இங்குதான் ஓடி வருவான்.
பாண்டி: மயில் இறகு போடட்டும் என்று காத்திருப்பதில் புண்ணியமில்லை. இதற்கு ஒரு ஏற்பாடு செய்து தான் தீர வேண்டும், புலி பதுங்கி இருக்கிறது என்றால் பாய்வதற்காகத்தான். நாம் எளிதாக எண்ணினால், நம் கதி அதோகதிதான்.