பக்கம்:நல்ல பாடல்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுறுசுறுப்பான எறும்பு



சுறுசுறுப்பான எறும்பே - ஒரு
சோம்பல் இல்லாத எறும்பே !
குறுகுறு வெனநீ நடந்தே - நீ
கூடியே வாழ்வது ஒழுங்கே !


அரிசியைக் கண்டால் ஒட்டம்-தினம்
அங்கே உந்தன் கூட்டம் !
வரிசையில் சென்றே காட்டும் - உங்கள்
வழியே அழகினைக் கூட்டும் !


இனிப்பைத் தின்றிட நுழைவாய்-நீ
எப்படித் தான்வழி அறிவாய் ?
தனித்தே சென்று அறிவாய்-நீ
சுற்றம் சூழ்ந்தே மகிழ்வாய் !


கடித்தால் யானையும் கதறும்-நீ
கல்லில் ஊர்ந்தால் கரையும்
திடமாய் இருக்கும் எறும்பே-நான்
திடமாய் வாழ்ந்திட இயம்பே !

28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_பாடல்கள்.pdf/30&oldid=1341978" இலிருந்து மீள்விக்கப்பட்டது