பக்கம்:நல்வாழ்வுக்கு வழி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நல்வழி 31

நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறும் காலத்தில் கொண்ட கருவழிக்குங் கொள்கைபோல் ஒண்டொடீஇ போதம் தனம் கல்வி பொன்றவருங் காலத்தே மாதர்மேல் வைப்பார் மனம். (66)

வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலா எனைத்தாய நூலகத்தும் இல்லை-நினைப்பதெனக் கண்ணுறுவ தல்லால் கவலை படேல் நெஞ்சே மெய் விண்ணுறுவர்க் கில்லை விதி. (67)

நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும் அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே-நின்ற நிலை தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப் போனவா தேடும் பொருள். (68)

முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்றொருபொருளைத் தப்பாமல் தன்னுட் பெறானாயின்-செப்பும் கலையளவே யாகுமாம் காரிகையார் தங்கள் முலையளவே யாகுமாம் முப்பு. (69)

தேவர்குறளும் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியும்-கோவை திருவா சகமும் திருமூலர் சொல்லும் ஒரு வாசகமென் றுணர். (70)