இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நன்னெறி 43
கற்ற அறிவினரைக் காமுறுவர்
மேன்மக்கள் மற்றையர்தாம் என்றும் மதியாரே-வெற்றிநெடும் வேல்வேண்டும் வாள்விழியாய் வேண்டா புளிங்காடி பால்விேண்டும் வாழைப் பழம். (96)
தக்கார்க்கே ஈவர்
-தகார்க்களிப்பார் இல்லென்று மிக்கார்க் குதவார் விழுமியோர் -எக்காலும் நெல்லுக் கிறைப்பதே நீரன்றிக் காட்டுமுளி புல்லுக் கிறைப்பரோ போய். - (97)
நல்லார் செயுங்கேண்மை
நாடோறும் நன்றாகும். அல்லார் செயுங்கேண்மை ஆகாதே-நல்லாய்கேள் கய்யமுற்றின் திள் தீங் கனியாம் இளந்தளிர்நாள் போய்முற்றின் என்னாகிப் போம். (98)
கற்றறியார் செய்யுங் கடுநட்பும்
தாங்கூடி உற்றுழியும் தீமைநிகழ் வுள்ளதே- பொற்றொடீஇ சென்று படர்ந்த -செழுங்கொடிமென் பூமலர்ந்த அன்றே மணமுடைய தாம், (99)
பொன்னணியும் வேந்தர்
புனையாப் பெருங்கல்வி மன்னும் அறிஞரைத்தாம் மற்றொவ்வார் மின்னுமணி பூணும் பிறவுறுப்புப் கொன்னே அது புனையாக் காணுங்கண் ஒக்குமோ காண். (100)
முற்றும்