அதுபோலவே 'சாவி' இரண்டு தினங்களே காந்தியுடன் இருந்தபோதிலும் பலகணி வழியாகப் பார்ப்பதுபோலப் பார்த்து மகாத்மாவின் நவகாளி யாத்திரை முழுவதையுமே கண்ணோட்டமிட்டு எழுதியிருக்கிறார்; வெகு ரசமாகவும் எழுதியிருக்கிறார்.
இந்த நூலில் உள்ள கட்டுரைகள் வெறும் நகைச்சுவைக் கட்டுரைகள் அல்ல; வெறும் பிரயாணக் கட்டுரைகளும் அல்ல; சரித்திரத்தில் இடம் பெற வேண்டிய முக்கிய நிகழ்ச்சியைப் பற்றிய தார்மீகக் கட்டுரைகள்; காந்திஜியையும் அவருடைய ஜீவிய தர்மத்தையும் எல்லோரும் அறியத் தெளிவாக்கித் தரும் கட்டுரைகள்; இலக்கியம் என்று சொல்வதற்குரிய ரஸ்மான கட்டுரைகள்.
தமிழுக்கும், தமிழ் நாட்டுக்கும், தமிழ் நாட்டிலுள்ள காந்தி பக்தர்களுக்கும் 'சாவி’ சிறந்த பேருதவி புரிந்திருக்கிறார்.
இந்த நூலை வாங்கிப் படிக்கும் நண்பர்கள் 'சாவி'க்குப் பிரதி உபகாரம் எதுவும் செய்துவிட முடியாது. தமிழ் நாட்டினருக்கு இத்தகைய பேருதவியை 'சாவி'யும் இனி ஒரு முறை செய்துவிட முடியாது.
சென்னை
ரா.கிருஷ்ணமூர்த்தி
20-2-1948
ஆசிரியர் 'கல்கி'