பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நவகாளி யாத்திரை

17


"பரவாயில்லை; மகாத்மாஜிக்கும் வங்காளி பாஷை தெரியாதாம். ஆகையால் கவலையில்லை" என்றேன்.

சிறிது நேரம் கழித்து, சாரியார் மீண்டும் என் அறைக்குள் பிரவேசித்தார்.

"ஏன் ஸார், அங்கெல்லாம் அடிக்கடி பசிக்குமாமே, அதற்கு என்ன செய்வீர்?" என்று கேட்டார்.

"அங்கு மட்டுமென்ன? எனக்கு எங்குமே அடிக்கடி பசி எடுக்கும். ஆகையால் அடிக்கடி பசி எடுத்தால் அடிக்கடி சாப்பிட்டு விடுகிறேன்" என்று சமாதானம் கூறி அனுப்பினேன்.

திரு. சாரியார், பாவம், நான் தனியாகப் போகிறேனே என்ற கவலையில் அடிக்கடி இம் மாதிரி ஏதாவது கேள்விகள் கேட்டுக் கேட்டுத் தாமாகவே அலுத்துப் போய்க் கடைசியாக, "ஏதோ ஸார், தனியாகப் போகிறீர்கள்; போய் வாருங்கள்; வாயுள்ள பிள்ளை பிழைக்கும்" என்று எச்சரித்துவிட்டுப் படுக்கப் போய்விட்டார்.

மறுநாள் நான் கிளம்பியபோது, அவர் மனைவியார் என் வழிப்பிரயாணத்துக்காகச் சாப்பாடு கட்டிக் கொடுத்ததுடன் சில தினங்கள் வைத்துச் சாப்பிடக் கூடிய ஆகாரமான பொரி உருண்டைகளும் செய்து தந்தார்.

நான் வாயுள்ள பிள்ளையாகையால் அந்த அம்மாள் கொடுத்தனுப்பிய சாப்பாடு, பொரி உருண்டை முதலியவற்றை மறுநாளே தீர்த்துக் கட்டிவிட்டேன்.

பின்னர், எனக்குத் தெரிந்த அரைகுறை ஹிந்தி பாஷையை வைத்துக்கொண்டு ரயில் ஏறி, கப்பல் ஏறி,

2