பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

நவகாளி யாத்திரை


எனவே, நவகாளி யாத்திரைக்காக நானும் என்னுடைய இரண்டாவது பிரயாணத் திட்டத்தைப் போட்டுக் கொண்டு மறுநாள் விடியற்காலம் புறப்படுவதற்குச் சித்தமானேன்.

திரு. சாரியார் கவலை

முதல் நாள் இரவு எனக்குத் தூக்கமே வரவில்லை. போதாக்குறைக்கு நண்பர் சாரியார் வேறு மூச்சுக்கொரு தடவை வந்து என்னைக் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்.

"ஏன் ஸார், அங்கெல்லாம். ரொம்பக் குளிரும் என்று சொல்கிறார்களே, என்ன செய்வீர்கள்?" என்று கேட்டார்.

"குளிருமா? அப்படியானால் இதோ இந்தக் கம்பளிக் கோட்டைப் போட்டுக் கொள்வேன்" என்று பதில் கூறினேன் நான்.

சற்று நேரம் கழித்து, சாரியார் இன்னொரு தடவை வந்து எட்டிப் பார்த்தார்.

"ஸார், தங்களுக்கு வங்காளி பாஷை தெரியாதே, என்ன செய்வீர்கள்?" என்று கேட்டார்.