இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
93
‘கரிக்கட்டை ‘ அந்தக் கதைக்கு வடபழனியில் இருந்து அழைப்பு வந்தது.
அதைக் கொச்செப்படுத்த விரும்பவில்லை.
என் மனைவி ஒப்புக் கொள்ளவில்லை.
கதை படத்தில் வர வேண்டும் என்று விரும்பினாள்
அந்தப் பாத்திரத்தை ஏற்று நடிக்க எந்த அழகியும் முன் வரவில்லை ‘
பணக்காரி’ என்ற தலைப்பைக் கொடுத்து அவளை அழகுள்ளவளாக்கிய பிறகு அதை நடிக்க அமெரிக்கா வுக்குப் போய்த் திரும்பிவந்த நடிகை நடிக்க முன்வந்தாள்
‘'பணக்காரி” ஓகோ என்று ஓடியது.
அதற்குப் பிறகு என் வீடு தேடி அஞ்சல் கடிதங்கள் நிறைய வந்தன.
தாடி என்ற பெயரை மட்டும் கொடுத்தால் போதும் என்றார்கள்.
‘முடியாது நானே எழுதுவேன்’ என்றேன்.
‘'ஒரு முறைதான் ஒருவன் கதை அழகாக எழுத முடியும். தொடர்ந்து எழுத முடியாது; எழுதினால் தோல்விதான்’ என்று அனுபவம் கொண்டு சொன்னார்கள்
‘என்ன செய்ய வேண்டும்’ என்று கேட்டேன்.