பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

‘அவங்கதான் நீ அப்படி இப்படின்னு கேட்டுத் தொலைக்க மாட்டாங்க’

‘நாட்டுப் பற்றே உங்களுக்கு இல்லையே ‘உலகப் பற்று அதிகம் ‘சரி யார் மேலேதான் சந்தேகம்

‘இது, பேய்வீடு; எல்லாரும் பேய்தான் யார் வேணுமானாலும் கொலை செய்திருக்கலாம்

தெளிவாகச் சொல்லுங்க’ ‘நான்தான் கொலை செய்தேன். ‘சரி ஏறுங்க வண்டியில்

செய்தித்தாளில் பரபரப்பாக அச்சு ஏறியது டிரை வர் சுந்தரம் என்ற முருகு என்பவர் நடிகை ஊர்மிளாவைக் கொலை செய்தார். ‘ரேப்’ செய்ய முயற்சி செய்து இருக்கிறார். அவள் எவ்வளவோ மன்றாடி இருக்கிறாள். அவன் அவள் கழுத்தை முறித்துக் கதறக்கறச் சித்திரவதை ‘செய்து கொலை செய்திருக்கிறான் அவனே தான் கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறான் நடிகையின் தாயார் தான் தான் அவனைக் கொலை செய்யச் சொன்னதாக வாக்குமூலம் தந்திருக்கிறாள். நடிகையின் நடத்தையில் நம்பிக்கை இல்லாததால் தாய் மகளைக் கொலை செய்யத் தூண்டினாள் என்று விளக்கம் தரப்பட்டது.