பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோர்ட்டில் வழக்கத்திற்கு மாறாகக் கூட்டம் நிரம் பியது; வக்கீல்கள், சம்பந்தப்பட்டவர்கள் மட்டும் அனு மதிக்கப்பட்டார்கள்.

T.V. தானியங்கியாக சர்வ சுதந்திரத்தோடு இயங் கியதால் அவர்களும் வந்து படம் எடுத்தார்கள். இந்த மாதிரி பரபரப்பான வழக்குகளை T.V-ல் பார்க்கத் தொடங்கிவிட்டனர். இது அவர்களின் முதல் எக்ஸ்பிரி மெண்டு. இந்த மாதிரி விஷயங்களை T.V. ஸ்தாபனத் தார் தொடர்ந்து படம் எடுக்க ஆரம்பித்தனர்.

அந்தக் காட்சியை 2 - nd Channel -லில் ஒலிபரப் பினார்கள். எல்லோரும் ஒலியும் ஒளியும் பார்ப்பதை விட்டு விட்டு இந்த ஸ்டேஷனைத் திருப்பிப் பார்த் தார்கள்.

நடிகர் கூண்டில் நிற்கிறார்

இதுபோல் பலமுறை நடிப்புக்காக நின்று இருக்க கிறார். இது புது அனுபவம்.

சத்தியமாகச் சொல்கிறேன்’ என்று கோர்ட்டு அசிஸ்டண்டு இவருக்காகச் சத்தியம் செய்தார்.

‘நடிப்புத் தொழிலுக்கு எப்பொழுது வந்தீர்?.

‘என்னைப் பலர் ‘பிறவி நடிகன்’ என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.

ரிஷிமூலம் என்ற படத்தை பார்த்திருப்பீர்கள். பார்த்தீர்களானால் எங்கள் மூலத்தைக் கேட்கக்கூடாது