பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

‘அவளை நீர் அழுத்திப் பிடித்தீரா?’

அழுத்தம் எங்கே பிடிப்பு எங்கே என்று சொல்ல முடியுமா?’

‘இங்கே எதையும் சீரியசாக யாரும் எடுத்துக்கொள் வதில்லை . புது நடிகை. அதனால் இதற்கு விதிவிலக் காக இருக்கலாம்

‘நீர் அவரிடம் முரட்டுத்தனமாகவும் கொஞ்சம் ஓவராகவும் கட்டிப்பிடித்தீர்கள் என்று சொல்கிறார்!’

‘முன்னமே என்னிடம் சொல்லியிருந்தால் அது போல் அவளும் என்னைக் கட்டிப்பிடிக்க அனுமதி கொடுத்திருப்பேன். அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் அதை நான் பொருட்படுத்தி இருக்கமாட்டேன்’

‘அது இல்லை, ஒரு பொம்பளையை ஓர் ஆம்பளைக் கட்டிப்பிடிக்கக்கூடாது. நடிக்கவேண்டுமே தவிர உண்மையாக நடந்து கொள்ளக்கூடாது என்பது தெரியும் இல்லையா?’

‘இதில் எல்லாம் எப்படிங்க அளவிட்டுச் சொல்ல முடியும். அவர்கள் வெறும் பொம்மைகள் அல்ல; ஜீவன் உள்ள மனிதப்பிறவிகள். நாங்களும் தவசிரேஷ்டர்கள் அல்ல துடிப்பு மிக்க இளைஞர்கள்; அவர்களுடைய கவர்ச்சி எங்கள் கட்டுப்பாட்டை உடைத்து எறிந்து விடு வது சர்வ சகஜம். இதைப்போய் ஒரு கம்ப்ளைண்டாகக் கொடுத்திருக்கிறார்கள் என்றால், அவர்கள் பட உலகுக் குக் கால் எடுத்து வைத்திருக்கக்கூடாது; குடும்பப் பெண் ணாகக் காற்றோட்டமில்லாத புடவையைச் சுற்றிக் கொண்டு தன் திறமைகளை மூடி வைக்க வேண்டியது