பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘அப்போ நடிகை செய்தது சரி என்கிறீர்கள்

‘கன்னிப்பெண்ணைப் பூட்டி வைத்து அவன் கற்பைக் காக்க முற்படுவது தவறு என்றால் இதுவும் தவறுதான்; பெற்றோர்கள் பெரியோர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையை அவர்களே மேற்கொண்டார். கள். அவர்கள் மீது நான் காதல் கொள்ளவில்லை ; ரசி கன் வேறு காதலன் வேறு; ரசிகன் ஆதாரத்தோடு விரும் புவான்; அழகையும் கலையையும் விரும்புபவன் கலை ஞன்; காதலன் கவர்ச்சியால் அறிவு கெடுபவன்; மயக்கம் அவன் நோய்; காதலன் ஒருவனாகத்தான் இருக்கமுடியும். ஆனால் ரசிகர்கள் பல்லாயிரக் கணக்கில் இருக்கலாம். ‘கலை’ ரசிகனைத் தேடும் ; பெண்மை காதலனைத் தேடும் ; நான் ஒரு கலைஞன் காதலன் அல்ல; அவள் காலையில் ஈடுபாடு கொண்டவள்; அவள் ‘சாவு’ என்னை அதிரச் செய்தது. அரசியல் தொண்டன் மண் எண்ணெயைத் தேடுகிறான்; நான் உங்கள் தண்டனையைத் தேடினேன். இது பைத்தியக்காரத்தனம்தான் : ஒரு வெறியால் ஏற்பட்ட டது. அத்தகைய வெறியன் நான். அவளைக் கொல்ல வில்லை; அவள் சாவதற்கு நான் காரணமும் அல்ல; ‘

‘உனக்கு யார் மீதாவது சந்தேகம் உண்டா ?

‘அவள் நடிகர் தரணியிடம் காதல் கொண்டிருக் கிறாள்; அவர் தூண்டிவிட்டியிருக்கிறார்; சுடர்விளக்கு ஒளிவிட்டது. அவன் அணைத்து இருக்கவேண்டும்; அவள் அருகிலேயே அவன் வருவதில்லை. ஏக்கத்தால் தூக்கம் கெட்டிருக்கிறாள்; அவள் இதயம் வெடித்து விடுவது போல் விம்மி விம்மி அழுதிருக்கிறாள். அதனால் அவள் இறந்திருக்க வேண்டும்