11 மருத்துவர் சாட்சியம்
இதயத்தில் இரத்த உறைவு (Blood Clot) ஏற்பட் டிருக்கிறது. பயத்தினால் ஏற்பட்டிருக்கலாம்; உணர்ச்சி வேகத்தால் ஏற்பட்டிருக்கலாம் அல்லது வன்முறை காரணமாகவும் இருக்கலாம். ஆக மொத்தத்தில் இரத்த உறைவுதான் காரணம்.
-
-
-
12
நீதிபதியின் தீர்ப்பு
அரசாங்க தரப்புவாதம் நடிகரின் வன்முறைதான் என்பது; அவர்கள் மற்ற இரண்டு காரணங்களுக்கும் சாட்சியங்களைக் கொண்டுவந்து நிறுத்தியது பாராட்டத் தக்கது. எப்படியாவது குற்றவாளி தான்தான் என்று நிருபிக்கும் நோக்கம் இல்லாமல், பலதரப்பட்ட அபிப் பிராயங்களுக்கும் சாட்சிகள் கொண்டுவந்து நிறுத்தியதும் பாராட்டத்தக்கதுதான். 1) நடிகரின் அஜாக்கிரதையான வன்முறை. 2) நடிகனை அடைய வேண்டும் என்ற ஏக்கமும்
பெருமூச்சும் காரணமாக இருக்கலாம். 3) பேய்பயத்தாலும் இரத்த நாளங்கள் வெடித்து
இருக்கலாம்.
இந்த மூன்றுவித வாய்ப்புகளுக்கு இடம் இருப்ப தால் சரியான தீர்ப்புக் கூறமுடியாமல் இருக்கிறோம்.