இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
டொளியவர்.
‘உனக்குக் கலியாணம் பண்ணி வச்சிட்டு தான் கண்ணை மூடப் போறேன் என்றார்.
‘அது வரையும் எப்படித் தாத்தா கண்ணைத் திறந்து வச்சிக்க முடியும்’ என்று கேட்டான்.
‘சீ மடையா நான் அதுவரை சாகமாட்டேன் , என்று சொல்ல வந்தேன்’ என்றார்.
‘நான் கலியாணமே பண்ணிக்க மாட்டேன்’ என்றான்.
‘எதுக்கடா’ என்று கேட்டார்.
‘நீ செத்திடுவே அதுக்குத்தான்’ என்று பிரியமாகப் பேசினான்.
தாத்தா! படிப்பு முக்கியமா கலியாணம் முக்கி யமா’ என்று கேட்டான்.
‘படிப்புதான்’ என்றார் தாத்தா . ‘கலியாணம் தான் என்றான் அவன். ‘எப்படிடா’ என்று கேட்டார்.
‘படிப்புகூட இல்லாமல் இருக்க முடியும் யாராவது கலியாணம் இல்லாமல் இருந்திருக்காங்களா’ என்று கேட்டான்.
‘நீ பத்திசாலிடா’ என்றார் அவர்.
-
இவனை அவன் தாயார் பால் வாங்கி வரச் சொன்னார்.
ஆண்பாலான பெண்பாலா’ என்று கேட்டான்.