பக்கம்:நாடகக் கலை 1.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 காடகக் கலை காடகம் எழுதுகிற ஆசிரியரோ அல்லது கடிக்கிற கடிகரோ தமது கருத்தைக் கலையழகுடன வெளிப் படுத்த முடியாததல்ைதான், பெரும்பாலும் நிகழ்ச்சி களின் மூலம் எடுத்துக்காட்ட வேண்டிய கருத்துகளை அப்படியே பிரசங்கம் செய்யத் தொடங்கிவிடுகிருர்கள். நாடக மேடைக்கும் சொற்பொழிவு மேடைககும் வேறுபாடு தெரியாமல், செய்து விடுகிருர்கள். நாடகாசிரியர்கள் இந்த உண்மையைப் புரிந்து கொள்வது நல்லது. நாடகம் நாடகமாக இருக்கவேண்டும் நாடகத்தில் பிரசாரம் இருக்கலாம்; அது காட்டி லுள்ள எந்தக் கட்சியின் கொள்கைப் பிரசாரமாகவும் இருக்கலாம். ஆனல் அரங்கிற்கு வரும்போது நாடகம் காடகமாக இரு க் க வே ண் டு ம். காடகத்திற்குரிய இலட்சனங்கள் எல்லாம் அதில் பொருந்தியிருக்க வேண்டும். ஆசிரியன் தான் மக்களுக்குச் சொல்ல. விரும்பும் கருத்துகளுக்கு ஏற்றபடி கதை, பாத்திரங் கள், கிகழ்ச்சிகள் இவற்றையெல்லாம் படைத்துக் கொள்ள வேண்டும். எண்ணங்களை இடமறிந்து பாத்திரத்தின் பண்பு கெடாமல் வெளியிட வேண்டும். அதுதான் கலைக்கும் அப்பட்டமான பிரசாரத்திற்கும். உள்ள வேறுபாடு. பிரசாரக் கருத்துகளை வெளியிடும் ஆவேசத்தில் காடகக் கலைக்குரிய சிறப்பான அம்சத்தைக் கொன்று: விடக்கூடாது. உரையாடல்களை எழுதும் பொழுது நாடகப் பாத்திரங்களை கன்கு கினைவில் இருத்த வேண்டும். கருத்துக்காக வசனமே தவிர வசனத்திற். காகக் கருத்தல்ல. அடுக்கு மொழிகள் அவசியமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/126&oldid=1322672" இலிருந்து மீள்விக்கப்பட்டது