பக்கம்:நாடகக் கலை 1.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காடகத்தில் பிரசாரம் 125 மட்டும்தான் நாம் பிரசாரமாக கினைக்கிருேம். அது தவறு. மனிதனுடைய மைேதத்துவப் போராட்டங் களை விளக்கிக் காட்டி அதில கல்லதற்கு வெற்றி காண்பிப்பதும் பிரசாரம்தான். பிரசாரத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்: ஒன்று கிரந்தரமானது; மற்றென்று அழியக்கூடியது. உள்ளத்திலே எழக்கூடிய உணர்ச்சிப் போராட்டங்கள் கிரந்தரமானவை; மனித குலம் இருக்கும்வரை அந்த உணர்ச்சிகளும் இருக்கும். சமூக அரசியல் பொருளா தாரப் போராட்டங்கள் கிலையற்றவை. கால மாறு பாட்டிற்கேற்ப காளுக்கு நாள் மாறிக்கொண்டே போகும். இந்த இரண்டு வகையான பிரசார நாடகங் களும் காட்டுக்குத் தேவையானவையே. தனி மனித னுடைய உள்ளத்தையும் உயர்த்த வேண்டும்; சமுதாயத்தின் கிலையையும் உயர்த்தவேண்டும். தனி மனிதப் பண்பு வளர்வதிலேதான் சமுதாயத்தின் வளர்ச்சியும் அடங்கியிருக்கிறது. சமுதாயத்தை உயர்த்துவதுஎப்படி என்பதில்தான் கருத்து வேற்றுமைகள் ஏற்படுகின்றன. ஒன்றுமட்டும் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன். சமுதாயத்தை உயர்த்துவதாக கினைத்துக்கொண்டு அறிவுப் பிரசாரம் என்ற பெயரால அழிவுப் பிரசாரம், அபத்தப் பிரசாரம் முதலியவற்றைச் செய்வதால் யாருக்கும் கன்மையேற் படாது. அப்படிச் செய்யத் தொடங்கும்போது கலை மறைந்து நாடக மேடை வெறும் பிரசார மேடையாகி விடுகிறது. அதற்காக கம் கலையில் பிரசாரக் கருத்து களே கூடாது என்ற முடிவுக்கு வந்து, கலை கலைக் காகவே' என்னும் குழுவில் சேர்ந்துவிட முயல்வது தவருகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/125&oldid=1322671" இலிருந்து மீள்விக்கப்பட்டது