பக்கம்:நாடகக் கலை 1.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காடிகத்தில் பிரசாரம் 147: நாடகம் தந்த நற்பயன் "அந்தமான் கைதி’ என்ருெரு நாடகம் நடித்தோம. தன் அன்புத் தங்கையின் கல்வாழ்வுக்காக அவளைப் பலவந்தப்படுத்தி மணந்த கிழவனைக் கொலை செய்து விட்டுத் தீவாகதிர தண்டனை பெறுகிருன் அண்ணன். இந்த நாடகத்தைப் பார்த்த மாவட்ட நீதிபதி சி. எஸ். செளத்திரி அவர்கள், இந்த நாடகம் என் போன்ற நீதி பதிகளுக்கு நீதியை எடுத்துச் சொல்வதுபோல் இருக் கிறது. இம் மாதிரியான நாடகங்களை என்போன்ற நீதிபதிகள் பார்க்க வேண்டுமென ஆசைப்படுகிறேன்' என்று கூறினர். அப்படிக் கூறியதோடு கிற்கவில்லை. இரண்டு மாதங்களுக்குப்பின் நடந்த ஒரு கொலைவழக்கு அவர்முன் விசாரணைக்கு வந்த போது, அந்த வழக்கு அந்தமான் கைதி வழக்குப்போலவே யிருந்ததால், குற்றவாளிக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கினர். இப்படி நாடகத்தால் கலன் விளைந்த எத்தனையோ கிகழ்ச்சிகளை எடுத்துக் கூறலாம். ஷேக்ஸ்பியரின் உள் நாடகம் நாடகத்தை கல்ல முறையில் பயன்படுத்திக் கொண்ட செய்தியை நாம் ஆங்கில நாடகங்களிலே கூடப் பார்க்கலாம். மகாகவி ஷேக்ஸ்பியரின் ஹாம் லெட்' நாடகம் உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கு மென்று கருதுகிறேன். அந்த ஹாம்லெட் நாடகத்திலேயே உள் நாடகம்' ஒன்று வருகிறது. தன் தந்தையைக் கொலைசெய்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/147&oldid=1322693" இலிருந்து மீள்விக்கப்பட்டது