பக்கம்:நாடகக் கலை 1.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகத்தில் பிரசாரம் 155 காம் விரும்பும் புதுமை, மனித வாழ்வுக்கு நன்மை செய்வதாக இருக்கவேண்டும் என்பதைத்தான் கலைஞன் இலட்சியமாகக் கொள்ள வேண்டும். நாடகங்களிலும், திரைப்படங்களிலும் இந்தப் புதுமை ஏமாற்று வித்தை இன்று திறமையாகக் கையாளப்படுகிறது. அறிஞர்கள் என்று கம்மால் கருதப்படுவர்கள் கூட இந்தச் செயல்களை ஆதரிக் கிருர்கள். கதைக்குப் பொருத்தமோ பொருத்தமில்லையோ கவலையில்லை. வளர்ச்சி பெற்று வரும் மக்களின் உணர்ச்சிகளைப் பயன்படுத்திக் கொள்ளுகிருர்கள். கதை, பாத்திரம், இடம், கேரம் இவற்றைப்பற்றி யெல்லாம் சிந்திக்காமல் எதை வேண்டுமானுலும் சொல்லத் துணிந்து விடுகிருர்கள். இப்படி எங்கே யாவது ஏதாவது இரண்டொரு வார்த்தைகளைச் சொல்லிக் கைதட்டல் வாங்கிப் புதுமையான மறு மலர்ச்சிக் கருத்துகளைப் புகுத்திவிட்டதாகப் பறை சாற்றுகிறர்கள். மறுமலர்ச்சி என்பது எது? கலைகளின் மூலம் தங்கள் கருத்துகளை-கொள்கை களைப் பிரசாரம் செய்ய எல்லோருக்கும் உரிமையுண்டு. அதற்காகக் கலையைக் கொலை செய்வது கூடாது. சொல்ல விரும்பும் கருத்துகளுக்கேற்பக் கதையையும் பாத்திரங்களையும் படைத்துக் கொள்ள வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/155&oldid=1322701" இலிருந்து மீள்விக்கப்பட்டது