பக்கம்:நாடகக் கலை 2.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

வந்தார்கள்.கொலைகாரன், கொள்ளைக்காரன் முதலியவர்களைக் கண்டால் மக்கள் எப்படிப் பயந்து ஒதுங்கி வாழ்வார்களோ அதே நிலைதான் நாடகக்காரனுக்கும் இருந்து வந்தது. நாடகக்காரனென்றால் குடியிருக்க வீடு கொடுக்கக்கூட மக்கள் பயந்தார்கள். அநேக ஊர்களில் மயானக்கரைக்கு அருகே பேய்கள் வசிக்கும் வீடென்று ஒதுக்கப்பட்ட வீடுகளில்தான் அந்தக் காலங்களில் நாங்கள் குடியிருக்க நேர்ந்தது. 'ஒரு தொழிலுமில்லாதார் நாடகக்காரரானார்' என்பது ஒரு பழமொழியாகக்கூட உருவாகி இருந்த காலம்.

நல்ல சூழ்நிலை

அந்த அவல நிலையெல்லாம் மாறி இன்று நாடகக் கலைஞர்களைப் பாராட்டுகிறார்கள்; நாடகக்கலைஞர்களைச் சமுதாயத்தின் முக்கிய அங்கமாகக் கருதுகிறார்கள்; நாடகக்கலை வளர்ச்சியால் நாடு வளர்ச்சி பெறுமென்று நம்புகிறார்கள் நாடக வளர்ச்சிக்காக அரசியலாரே சங்கம் அமைத்திருக்கிறார்கள்; பட்டம் வழங்குகிறார்கள்; பரிசு கொடுக்கிறார்கள்; பாராட்டுகிறார்கள்; பல்கலைக் கழகத்திலே நாடகத்தைப்பற்றிப் பேச நாடகக்கார னுக்கு அழைப்பு விடக்கூடிய அளவுக்கு நல்ல சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறதென்றால் அன்றும் இன்றும் வாழ்ந்திருக்கும் பேறு பெற்ற என் போன்றவர்களுக்கு வாழ்வில் இதைவிட மகிழ்ச்சியளிக்கும் விஷயம் வேறு எதுவும் இருக்க முடியாதல்லவா?

வளர்ச்சி வேகம்

சென்ற 40 ஆண்டுகளில் தமிழ் நாடக மேடை அடைந்திருக்கும் வளர்ச்சியைக் காணும் போது எனக்கே வியப்பாகத்தானிருக்கிறது. மூன்றே மூன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/17&oldid=1540095" இலிருந்து மீள்விக்கப்பட்டது