பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45


வீற்றிருந்த கடிகர் மாதவராவ். மண்டுவும், கமண்டுவும் “ஸ்வாமி’ என ஓடி வந்ததும் சபையில் மேலும் சிரிப் பொலி அதிகரித்தது.

திரை மறைவில் மேலே விமானத்திலிருந்த எனக்கு என்ன கடக்கிறது என்பது தெரியவில்லை. தலையை நீட்டிப் பார்த்தேன். சிஷ்யர்களாக கின்ற என். எஸ். கேயும், கே. கே. பெருமாளும். மாதவராவைப் பார்த்து வாயைப் பொத்தியவாறு சிரிப்புத் தாங்காமல் பொருமிக் கொண்டிருந்தார்கள். சீடர்களின சிரிப்பைக் கண்ட சபையோர் மேலும் கைதட்டிச் சிரித்தார்கள். மாதவராவ், இருந்த இடம் எனக்குத் தெரியவில்லை. இதற்குள் உள்ளேயும் சிரிப்பொலிகள் கேட்கத் தொடங்கின.

என். எஸ். கே. பேச வேண்டும். அவரோ பேச முடியாமல் “ஸ்வாமி! தங்கள்...தங்கள்......’ என்று. தவித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் திரை விடுங்கள்’, “திரை விடுங்கள்’ என்று உள்ளே பல குரல்கள். திரை விடப்பட்டது. விமானம் கீழேயிறக்கப் பட்டது பிறகுதான் எனக்கு உண்மை விளங்கியது.

விமானம் காலவரைக் கடந்து செல்லும்போது, அந்த அட்டை விமானத்தில் நீட்டிக் கொண்டிருந்த, ஒர் ஆணி கிஷ்டையிலிருந்த முனிவரின் நீண்ட கொண்டையோடு கூடிய சடைமுடி டோப்பா'வையும் பூப்போல எடுத்துக் கொண்டு போய்விட்டது. விமானம் மறைந்ததும் கிஷ்டை கலைந்த காலவர் மொட்டைத் தலையில் உச்சிக் குடுமியோடு சபைக்கும் காட்சியளித் தார். உணர்ச்சியோடு வீற்றிருந்த அவருக்குக் கொண்டை பறிபோனதுகூடத் தெரியவில்லை. அவ்வளவு லகுவாக டோப்பாவை கொண்டு போயிருக் கிறது ஆணி. இந்த நிலையில் முனியுங்கவரைப் பார்த்த,