55
மரகதம் : அத்தான்...அத்தான்...என்ன? என் மேல் கோபமா? குறித்தபடி சீச்கிரமாக வரவில்லை யென்று.........
சுந்தரம் : மரகதம், என்னைத் தொடாதே! இன்னும் எத்தனை நாள் இந்தப் பரதேச ஆடையுடன் உன்னைக் கண்டு மனம் சகிப்பேன்; நான் ஊராரை யெல்லாம் கதரணியச் செய்வது, உன்னை மட்டும் இக்கோலத்தில் காண்பதா?
மரகதம் : அத்தான்...கான் என்ன செய்வது? தாங்கள் கதராடை அணிந்தது முதல், அப்பா தங்கள்மீது மிகவும் வெறுப்புறறிருக்கிறார். தங்களோடு கான் பேசவும் கூடாதாம்.
சுந்தரம்: மரகதம்,...நீ என்னைக் காதலிப்பது உண்மை
தானு?
மரகதம் : இதென்ன கேள்வி அத்தான்?
சுந்தரம் : நீ என்னேக காதலிப்பதானல் இன்று முதல்
இந்தப் பரதேச ஆடை உடுத்துவதை விட்டு விட்டுக் கதராடை புனைய வேண்டும்.
மரகதம் : இதென்ன இது...இருதலைக்கொள்ளி எறும்பு போலன்றாே இருககிறது என் கிலேமை அத் தான்...நமது கல்யாணம் நிறைவேறும் வரையி லாவது பொறுத்துக் கொள்ளக் கூடாதா?
சுந்தரம் : கதராடை தரிப்பதில் உனக்கே விருப்ப
மில்லை போலிருக்கிறது.
மரகதம் : இதுவரை மெல்லிய ஆடைகளை உடுத்தி விட்டு இப்போது கரடுமுரடான புடவைகளை