பக்கம்:நாடு நலம் பெற.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலிகை வளமே நாட்டுவளம் கன்னப்பர் வாழ்க்கை:

உலகமே அறிவொளிபெற்று ஆத்மஞானநெறிநிற்க வழிகாட்டிய அறிவுமகனை அன்று வடநாட்டில் பிறந்த குஞானநெறி நின்ற இராமகிருஷ்ணரும் சாரதாமணி அம்மையாரும் உலகுக்குத் தந்து ஞானத் தாய்தந்தையராக அறிவுத் தாய்தந்தையராக உயர்நிலை உற்றனர். நம் வேலூர் இராமகிருஷ்ண முதலியார் அவர்களும்சார தாம்பிகை அம்மையாரும், அறிவுபெற- பெறுதற்கிட மான உயிர்நிலவும் . உடல் நலமுற நம் மூலிகைமணி கண்ணப்பரைத் தந்தனர்.

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' என்ற வகையில் உடம்பை.நோயின்றி வளர்க்கும். மூலிகை களின் நலம் கண்டு, நாட்டுக்கு உதவி, உலகம் உய்யப் பாடுபட்டு, அந்த உடலில் உலவும் உயிர் நலமுற்று"இறை யருளாம் நல்லொளியைப்பெற நம் கண்ணப்பர் அவர்கள் தம் ஆயுளையே உரிமையாக்கினார். அவர்தம் பெற்றோர். அவருக்குக் கண்ணப்பர்' என்ற பெயரிட்ட சிறப்பினை எண்ணி, அவர்களைப் பெரிதும் போற்றி வணங்குகின்றேன். காளத்திநாதனின் கண்ன்னில் இரத்தம்வடிய, வேறு எதனையும் கருதாது, மூலிகை யினையே தேடிக்கொணர்ந்து அவர் கண்களில் பிழிந்து வழிகாட்டி, நில்லு கண்ணப்ப' என்று அழைக்கப்பெற்று, அப்பெயரை அந்த இறைவனால் பெறப்பெற்ற அத்திருப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/11&oldid=782358" இலிருந்து மீள்விக்கப்பட்டது