பக்கம்:நாடு நலம் பெற.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலிகை வளமே நாட்டு வளம் ií இன்று, அவர் தந்தையின் பெயரால் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தே ஓர் அறக்கட்டளை நிறுவி, ஆண்டு தோறும் சித்த மருத்துவம், மூலிகை அடிப்படையில் சொற்பொழிவு நடத்த ஏற்பாடு செய்து, என்னை முதல் சொற்பொழிவு ஆற்றப் பணித்தார். அவர்தம் அன்பின் வழியே இன்று உங்கள் முன் நிற்கின்றேன். தமிழ்ப் பல்கலைக் கழகம் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்தை நினைக்கும் போது, அதன் தோற்ற நாள் என் கண்முன் நிழலிடு கின்றது. அதன் முதல் ஆட்சிக்குழுவில் நான் உறுப்பின னாக இருந்தேன். அக்காலத்தில் இத்துறையினை வளர்க்க மேற்கொண்ட முயற்சிகள் அளவில. புதிய வளாகத்திலும் நூறு ஏக்கருக்குமேல் மூலிகைப் பண்ணையின்ை அமைக்க ஏற்பாடு செய்தோம். (பழைய வளாகத்திலும் நல்ல மூலிகைப் பண்ணை இருந்தது) இன்று ஒளவையின் அரவணைப்பில் அவை நன்கு செழித்து நாட்டுக்கு வளந் தந்து கொண்டிருக்கும் என நம்புகிறேன். அதன் வளர்ச்சி சிறக்க என வாழ்த்துகின்றேன். பேசவேண்டிய பொருள் பற்றிக் கேட்டபோது வேங்கடேசனே தலைப்பினைத் தந்தார். மூலிகை வளமே நாட்டு வளம்" என்ற தலைப்பே அது. மூலிகை மணி தொடக்க நாளில் அதன் குறிக்கோள் அமைந்த தெளிபொருள் தொடர் வேண்டுமெனக் கேட்க, நானே இத்தொடரினைத் தந்ததாகத் திரு. வேங்கடேசன் என் னிடம் அடிக்கடி சொல்லுவார். எப்படியானாலும் இன்று அதே தலைப்பில் பேச உங்கள் முன் நிற்கின்றேன். பேச நினைக்குங்கால் கண்ணப்பர் காட்சி தருகின்றார். அன்றைய இளமையும் எழிலும் தோய்ந்த இன்முகம் காட்சி தருகின்றது. அவரைப் போற்றிய அன்பர் பலர்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/13&oldid=782402" இலிருந்து மீள்விக்கப்பட்டது