பக்கம்:நாடு நலம் பெற.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டுக் கல்வி நலமுற 95 சொல்ல வேண்டுமோ! தமிழ் முதுகலை வகுப்பிற்கே ஒரு தாள் தனிப் பொருள் பற்றிப் பெரும் கட்டுரை வடிவில் எழுத வேண்டும் என்று, மதுரைப்பல்கலைக்கழகம் ஆரம்பத்தில் ஒரு ஏற்பர்டு செய்திருந்தது. ஆனால் அது ஓராண்டுக்கு மேல் இல்லை என எண்ணுகின்றேன். காரணம் இதுதான் அந்த முதுநிலைப் பட்ட வகுப்பில் நானும் வேறு சிலரும் தேர்வாளராக இருந்தோம். நாங்கள் இருவர் இருவராகப் பிரிந்து, முப்பது பேரை அக்கட்டுரைகள் பற்றிக் கேள்வி எழுப்பி விடை கண்டு முடிவு செய்ய ஏற்பாடு. எங்களிடம் வந்த முப்பது பேரில், பலருக்குத் தாம் எழுதிய பொருள்களின் அடிப்படையே தெரியவில்லை. என்ன எழுதியுள்ளர்ர்கள்? எப்படி முடிவு கண்டார்கள்? எடுத்தாண்ட மேற்கோள்கள் யாவை? என்பன போன்ற வினாக்களுக்கே பலரால் விடை சொல்ல முடியவில்லை. அவர்களுள் பெரும்பாலோர் உண்மையினை ஒத்துக்கொண்டனர். நால்வர் தவிர்த்து, பிறர், வேறு யாரோ எழுதிக் கொடுக்க, தம் பெயரால் அவற்றைத் தந்ததாக ஒப்புக் கொண்டனர். சிலர் தமிழ்றிந்த உறவினர் எழுதித் தந்தனர் என்றனர். சிலர் காசும் பணமும் வாரி இறைத்து எழுதி வாங்கிக் கொண்டனர் என்றனர். இவ்வாறே பிற குழுவினரும் கண்டனர். இந்த அவலநிலை முதுகலைக்கு வேண்டாம் எண் எங்கள் தேர்வுக்குக் குழு முடிவு செய்தது. அதை அன்று துணைவேந்தராக இருந்த டாக்டர். மு. வரதராசனார் அப்படியே ஏற்றுக்கொண்டு அந்த ஆண்டோடு அதை நிறுத்திவிட்டார். இந்த முதுகலைக்கட்டுரை எழுதும் முறை புதியதன்று. அமெரிக்க நாட்டுப் பல்கலைக்கழகங்களில் இம்முறை உள் ளது. பென்சில் வேனியா பல்கலைக்கழகத்தில் தமிழ் முது கலை பாடமாக உள்ளது. அதில் இக்கட்டுரைத் தாளும் உண்டு. அந்த நாட்டு மகள் தமிழ் நாட்டு மருமகள் ஒருவர் அத்தேர்வில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார் தமிழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/97&oldid=782669" இலிருந்து மீள்விக்கப்பட்டது