பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii

றேன். இவற்றை வெளியிட்டு உதவிய சுதேசமித்திரன் ஆசிரியர் பூரீ ஸி. ஆர். பூநீநிவாஸ்ன் அவர்கள்பால் மிக்க நன்றி பாராட்டுகிறேன்.

சிலகாலமாக நாடோடிப் பாடல்களைத் தொகுப் பதிலும் அவற்றைப் பற்றிய கட்டுரைகளை எழுதுவதிலும் சில அன்பர்கள் ஈடுபட்டிருப்பதைக் காண எனக்கு மிக்க மகிழ்ச்சி உண்டாகிறது. தமிழ் நாட்டில் வழங்கும் பாடல்கள் அவ்வளவையும் தொகுத்து வெளியிடுவ தென்ருல், எவ்வளவோ பேர்கள் உழைக்கவேண்டும். அவ்வளவு பேருக்கும் வேலை இருக்கிறது. ஏறக்குறைய ஆயிரம் பாடல்களை நான் தொகுத்திருக்கிறேன்.

இந்தப் புத்தகம் நாடோடிப் பாடல்களின் சுவையைப் பொதுவாக உணர்வதற்கு ஒரு கருவியாக இருக்கு ழென்று நம்புகிறேன், இனியும் இந்த முறையில் சில புத்தகங்கள் வெளிவரும். பாடல்களைத் தனியே தொகுத்துக் குறிப்புக்களுடன் வெளியிட எண்ணியிருக் கிறேன். இறைவன் திருவருள் துணை செய்யவேண்டும்.

இங்ங்னம்,

கி. வா. ஜகந்நாதன்.